புதன், 5 டிசம்பர், 2018

48.கருவேப்பிலை லேகியம்

கறிவேம்பு லேகியம் என்ற கருவேப்பிலை லேகியம் :
கருவேப்பிலை பொடி  

உலர்திராட்சை
கற்கண்டு பொடித்தது 


                       உலர் திராட்சை அரைத்தது 

கருவேப்பிலை லேகியம் :


1.கருவேப்பிலை பொடி              100 கிராம் .
 (நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடித்தது).
2.உலர்ந்த திராட்சை பழம்        100 கிராம் ,
(விதைகளும்,காம்பு நீக்கியது )
3.கற்கண்டு பொடி                            100 கிராம்,
4.பசு நெய்                                                    1 ஸ்பூன்,
  • உலர்திராட்சையை ஒவ்வொன்றாக நன்கு  அரைத்த பின்பு ,
  • சிறிது கருவேப்பிலை பொடியும்,
  • கற்கண்டு பொடியும் சேர்த்து 
  • நெய் பூசிய பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும்,(கைகளில் நெய்யை தடவியிருக்கவும்)
  • பிறகு சிறிது சிறிதாக மறுபடியும் மீதமுள்ள கருவேப்பிலை பொடியும் ,கற்கண்டு பொடியும் முழுவதும் சேர்த்தப்பின்பு போதுமான அளவு பிசுபிசுப்பு தன்மை இல்லை எனில் சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளலாம். 
  • ஒரு தட்டில் நெய் தடவி அதில் செய்த மருந்தை ஒருமணி நேரம் காற்று பட வைத்திருந்து பின்பு புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு
  •  தினசரி காலை மாலை உணவிற்கு பின்பு கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு எடுத்து மென்று சாப்பிடவும்.10 நாட்களில் முடி உதிர்வது நிற்கும்.
  • தலைமுடி கருப்பாகவும் ,அடர்த்தியாகவும் வளரும்.
  • தொடர்ந்து சாப்பிட முடி நீளமாகவும் ,
  • கருமையாகவும் வளரும.
  • முடி நரைத்தவர்களுக்கு முடி அடியிலிருந்து கருத்து வளரும்.
  • வழுக்கையிலும் முடி புதிதாக முளைக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு :

கருவேப்பிலை பொடி   100 கிராம் ,
உலர் திராட்சை 

கறிவேப்பிலையும் ,உலர்திராட்சையும் மட்டும் சேர்ந்த லேகியம்.


கருவேப்பிலை பொடி   100 கிராம் ,
உலர்திராட்சை                    200 கிராம் ,
  • உலர்திராட்சையை ஒவ்வொன்றாக நன்கு  அரைத்த பின்பு 
  • சிறிது கருவேப்பிலை பொடி சேர்த்து நெய் பூசிய பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும்,(கைகளில் நெய்யை தடவியிருக்கவும்)
  • பிறகு சிறிது சிறிதாக மறுபடியும் மீதமுள்ள கருவேப்பிலை பொடியை சிறிது சிறிதாக முழுவதும் சேர்த்தும்  போதுமான அளவு பிசுபிசுப்பு தன்மை இல்லை எனில் சிறிதளவு உலர்திராட்சை அரைத்து  சேர்த்து கொள்ளலாம். 
  • ஒரு தட்டில் நெய் தடவி அதில் செய்த மருந்தை ஒருமணி நேரம் காற்று பட வைத்திருந்து பின்பு 
  • புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினசரி காலை மாலை உணவிற்கு பின்பு கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு எடுத்து மென்று சாப்பிடவும்.10 நாட்களில் முடி உதிர்வது நிற்கும்.
  • தலைமுடி கருப்பாகவும் ,அடர்த்தியாகவும் வளரும்.
  • தொடர்ந்து சாப்பிட முடி நீளமாகவும் ,
  • கருமையாகவும் வளரும.
  • முடி நரைத்தவர்களுக்கு முடி அடியிலிருந்து கருத்து வளரும்.
  • வழுக்கையிலும் முடி புதிதாக முளைக்கும்.
இம்முறையை எமக்கு கூறிய அருமை நண்பர் துரைராஜ் பாலாஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்.


https://youtu.be/TS7_3vpKuVM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக